சனி, 9 ஜூலை, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 9

தினந்தோறும் மாறிடும் மாறுதல் நீ !

ரணந்தோறும் கூறிடும் ஆறுதல் நீ !

கணந்தோறும் விரிந்திடும் கற்பனை நீ !

மனந்தோறும் பொழிந்திடும் மாமழை நீ !


ஆதியந்தம் இலாத ஜோதி வடிவே !

வேதமுற்றும் வடிவாக விளங்குமெழிலே !

நாதியற்ற பக்தர்குறை தீர்க்கும் அருளே !

நாதமென ஜீவனுக்குள் ஒலிக்கும் இசையே !

அம்மா...!

புன்னை நல்லூர் தாயே...!

உன்னை வணங்குகிறேன்..!