தினந்தோறும் மாறிடும் மாறுதல் நீ !
ரணந்தோறும் கூறிடும் ஆறுதல் நீ !
கணந்தோறும் விரிந்திடும் கற்பனை நீ !
மனந்தோறும் பொழிந்திடும் மாமழை நீ !
ஆதியந்தம் இலாத ஜோதி வடிவே !
வேதமுற்றும் வடிவாக விளங்குமெழிலே !
நாதியற்ற பக்தர்குறை தீர்க்கும் அருளே !
நாதமென ஜீவனுக்குள் ஒலிக்கும் இசையே !
அம்மா...!
புன்னை நல்லூர் தாயே...!
உன்னை வணங்குகிறேன்..!