வியாழன், 17 மே, 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 17

தனக்குவமை இலாத தாயே தயாநிதி!

தணித்த மஞ்சள் பூசும் ஒளி நிறைமதி!

எனக்கருள் தரும் உமா மகேஸ்வரி!

எல்லையிலா வெளி பாயும் மகாநதி!


சந்தனம் முல்லை சவ்வாது மரிக்கொழுந்து

சதிரிடும் தென்றலும் அந்தணர் விசிறலும்

தந்திடும் குளிர்ச்சியில் தணிந்திடும் தாயே

தஞ்சமுன் பொன்னடி காத்திடுவாயே!

ஞாயிறு, 13 மே, 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

மணிவிளக்கே! விளக்கின் திருச்சுடரே!

மலர்ச்சரமே! மலரின் நறுமணமே!

கனியமுதே! அமுதின் தனிச்சுவையே!

கவியழகே! கவியின் பொருள் நிறைவே!


ஒலியனைத்தும் இசையாய் சமைத்தவளே!

உலகமெங்கும் கனியாய் பழுத்தவளே!

மொழிகளிலே தமிழாய் இனிப்பவளே!

முயற்சியெல்லாம் ஜெயமாய் அளிப்பவளே..!