தனக்குவமை இலாத தாயே தயாநிதி!
தணித்த மஞ்சள் பூசும் ஒளி நிறைமதி!
எனக்கருள் தரும் உமா மகேஸ்வரி!
எல்லையிலா வெளி பாயும் மகாநதி!
சந்தனம் முல்லை சவ்வாது மரிக்கொழுந்து
சதிரிடும் தென்றலும் அந்தணர் விசிறலும்
தந்திடும் குளிர்ச்சியில் தணிந்திடும் தாயே
தஞ்சமுன் பொன்னடி காத்திடுவாயே!