வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 10

வெறுக்கும் பொருளுக்குள்ளும் வேதாந்தம் வைப்பாய் !-பகை

அறுக்கும் விழிச்சுடரால் ராஜாங்கம் செய்வாய்!

திசைகள் எட்டுக்குள்ளும் திமிராட்சி செய்வாய் !-நீ

விசைகள் அனைத்தினுள்ளும் வேராகி நிற்பாய்!


கட்டுத்தறியற்ற காற்றைக் கட்டி வைப்பாய் !

எட்டுத்திசை முட்டும் இசை கூட்டி வைப்பாய் !

வெட்டும்விழி கூரால் பகை தட்டி வைப்பாய் !

தட்டுதடுமாறிடுமெனை தாங்கி நிற்பாய் !

அம்மா! புன்னைவனத்தாயே !

உன்னை வணங்குகிறேன் !