வெறுக்கும் பொருளுக்குள்ளும் வேதாந்தம் வைப்பாய் !-பகை
அறுக்கும் விழிச்சுடரால் ராஜாங்கம் செய்வாய்!
திசைகள் எட்டுக்குள்ளும் திமிராட்சி செய்வாய் !-நீ
விசைகள் அனைத்தினுள்ளும் வேராகி நிற்பாய்!
கட்டுத்தறியற்ற காற்றைக் கட்டி வைப்பாய் !
எட்டுத்திசை முட்டும் இசை கூட்டி வைப்பாய் !
வெட்டும்விழி கூரால் பகை தட்டி வைப்பாய் !
தட்டுதடுமாறிடுமெனை தாங்கி நிற்பாய் !
அம்மா! புன்னைவனத்தாயே !
உன்னை வணங்குகிறேன் !