எங்கும் நிறை மங்கலமே!-எழில்
பொங்கும் அருள் பொன்கலமே!
நெஞ்சம் நிறை செழுஞ்சுடரே!-தீய
வஞ்சம் அற எழும் கதிரே!
தமிழ் கொடுத்தாய்!தலை நிமிர வைத்தாய்!
நெஞ்சில் அறம் வளர்த்தாய்!எனை ஆதரித்தாய்!
கனல் வளர்த்தாய்! நன்றாய் கனிய வைத்தாய்!
புன்னை வனத்தாய்! என்றும் நீயே என் தாய்!
