புதன், 22 ஜூன், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 8

எங்கும் நிறை மங்கலமே!-எழில்

பொங்கும் அருள் பொன்கலமே!

நெஞ்சம் நிறை செழுஞ்சுடரே!-தீய

வஞ்சம் அற எழும் கதிரே!


தமிழ் கொடுத்தாய்!தலை நிமிர வைத்தாய்!

நெஞ்சில் அறம் வளர்த்தாய்!எனை ஆதரித்தாய்!

கனல் வளர்த்தாய்! நன்றாய் கனிய வைத்தாய்!

புன்னை வனத்தாய்! என்றும் நீயே என் தாய்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக