
சுகிக்க கரைந்தோடும் உலகச்
சுகமனைத்தும்...
சுந்தரி நின் கருணைத் திருவிளக்கோ
ரசிக்க கணந்தோறும்
வளர்ந்து நிறைந்தொளிரும்..!
உருண்டிடும் காலம் கூட
உணர்ந்து நான் சுகிக்க சுகிக்க
உறையாது துளித்துளியாய்
கரைந்து தான் மெல்ல மெல்ல
காணாமல் போயொழியும்....
காலமும் கடந்த எந்தன்
கற்பகத்தருவே நின்னருள் நீழல் மட்டும்
சுகித்திட மேலும் மேலும்
வளர்ந்திடும்! சிறந்திடும் எங்கும்!
அம்மா!
கருணைக்கடலே!
கடலின் எழு முழு ஞாயிறே!
புன்னை நல்லூர் தாயே..!
உன்னை வணங்குகிறேன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக