ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

கனிவு மிகும் விழி பார்த்தேன் அம்மா!-அதில் வழியும்

இனிமைதரும் மொழி கேட்டேன் அம்மா!

துணிவுதரும் துயர்போக்கும் உயர்வினிலே

பணிவுதரும் அபயகரம் பற்றினேன் அம்மா!

புன்னை நல்லூர் தாயே!-உன்னை

வணங்கி நின்றேன் நானே!

சொல்லுக்குள் பொருளாக சொக்கி நின்றாய்!

வில்லுக்குள் விசையாகி உலகை வென்றாய்!

கல்லுக்குள் தேரைக்கும் கருணை தந்தாய் !

உள்ளுக்குள் உனைவைத்த என்னை காப்பாய் !

புன்னை நல்லூர் தாயே..! -உன்னை

சரணடைந்தேன் காப்பாயே..!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக