ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

நீ குளிர்ந்தா நிலம் குளிரும் அம்மையே அம்மா!-உன்னை

நினைச்சாலே மனம் குளிரும் அம்மையே அம்மா!

வாடவைக்கும் வினைகளெல்லாம் என்செயும் அம்மா-உந்தன்

வாழவைக்கும் திருக்கரங்கள் இருக்கையிலே அம்மா!


புன்னைநல்லூர் குடிகொண்ட அம்மையே அம்மா!

புகழனைத்தும் நீகொடுப்பாய் அம்மையே அம்மா!

உன்னையன்றி என் குறையை யார் அறிவாரோ?

உன்னடிகள் பற்றிநின்றார் வழி அறிவாரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக