ஞாயிறு, 23 டிசம்பர், 2012


ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ் 19



வானமளந்த வண்ண விழியாள் எனக்கு

தானம் வழங்க வருவாயோ?-மன

ஊனமடைந்து உயிர்வாடி நிற்கும்

நானுமுயர வ்ழியொன்று காட்டாயோ?

அம்மா!

புன்னைவனத்தாயே! என்னை காப்பாயே!


நோயறுக்கும் மருந்து நீயே!-மனப்

பேய்விரட்டும் மந்திரம் நீயே!

தாயிருக்க வாடுவேனோ நான்?-உன்

தயவிருக்க வருந்துவேனோ நான்?

அம்மா!

புன்னைநல்லூர் தாயே!-எனக்கு

புத்துணர்வூட்டுவாய் நீயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக