புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 20
விழியில் கருணை ஒளியே வழிய
வருவாய் அருள்வாய் மகமாயி!
வழியில் தொடரும் அடியார் மனதில்
பொலிவாய் பொழிவாய் மகமாயி!
வேதத்தின் முழுப்பொருளே! மிக உயர்ந்த
நாதத்தின் உட்செறிவே!உனைத்துதிக்கும்
கீதத்தில் வந்துதிக்கும் தாயே! நின்
பாதத்தில் தலைசாய்த்தேன் காப்பாய் தாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக