சனி, 29 டிசம்பர், 2012

புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 21

மருந்து உன் மைவிழிப்பார்வை!

களிம்புநின் கருவிழிப்பார்வை!

பிணிகளைப் போக்குமுன் கனிந்தநல் பார்வை!

நனிதரு நற்சுகம் அருள்வாய் தாயே!

புன்னைநல்லூர் தாயே! உன்னை

நம்பிநின்றேன் காப்பாயே!

ஆசைகள் நிரம்பிய உலகம்! நீ

ஆனந்தம் தருகின்ற இதயம்!

பூமழை பொழிகின்ற மேகம்! உன்

புகழ்தனை சொரிகின்ற கீதம்!

அம்மா! புன்னைநல்லூர் தாயே! எனை

பிணிநீக்கி சுகம் பெற வைப்பாயே!

2 கருத்துகள்: