காற்றில் கையறு நிலையில்
ஆதரிப்பார் யாருமின்றி
அநாதையாய்
அலைபாய்ந்து வந்த
காட்டுப்பூ விதை நான்..
எனை
தாங்கி தயைகாட்டி
தங்குமிடம் கூட்டி
நிலமாய் நின்மடிதனிலே
நித்தமும் இளைப்பாற்றி
மரமாய் நிழல் தருவாய்
மாற்றிய பூமகளே!
புன்னைநல்லூர் தாயே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
சிறியேனை ஆதரிப்பாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக