கரும்புள்ளியை பெரும்புள்ளியாக்குவாய்!
பெரும்புள்ளியை முற்றுப்புள்ளியாக்குவாய்!
அசைவை அபிநயங்களாக்குவாய்!
அபிநயங்களை அசைவற்று மாற்றுவாய்!
திரையை சித்திரமாக்குவாய்!
சித்திரங்களை விசித்திரமாக்குவாய்!
ஒரு சொல்லை கவிதையாக்குவாய்!
காவியங்களை காலால் இடறுவாய்!
மனமுருக வேண்டிடில்
மனதிற்குள் சிரித்து நிற்பாய்!
இதுபோல்
உளறிக் கொட்டுவதையெல்லாம்
உட்கார்ந்து கேட்பாய்!
புன்னைநல்லூர் தாயே!
உன்னை வணங்குகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக